உலகிலேயே முதன்முதலில் மாதவிடாய்க் கால உபயோகப் பொருட்களை அனைவருக்கும் இலவசமாக வழங்கும் நாடாக ஸ்காட்லாந்து மாறியுள்ளது.
டம்போன் துணிகள் மற்றும் மாதவிடாய்க் கழிவுத் துணிகள் போன்ற இலவசப் பொருட்களை "தேவை உள்ளவர்களுக்கு" வழங்க வேண்டிய ஒரு சட்டப்பூர்வக் கடமை தற்போது உள்ளூர் அதிகாரிகளுக்கு உள்ளது.
மாதவிடாய்க் கால உபயோகப் பொருட்கள் சட்டம் அமலுக்கு வருவதால், சபைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூலம் மாதவிடாய்க் கால உபயோகப் பொருட்கள் விநியோகிக்கப் படும்.
2018 ஆம் ஆண்டில், ஸ்காட்லாந்து அரசானது மாணவர்களுக்கு மாதவிடாய்க் கால உபயோகப் பொருட்களை இலவசமாக வழங்கிய உலகின் முதல் நாடு என்ற ஒரு வரலாற்றினைப் படைத்தது.