அபிலாஷ் டோமி கோல்டன் குளோப் பந்தயத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்து உள்ளார்.
இவர் தனியே யாருடைய உதவியுமில்லாமல் உலகம் முழுவதும் இடை நில்லாமல் சுற்றி வரும் வகையிலான சுமார் 30000 மைல் தொலைவிலான கோல்டன் உலகை சுற்றி வரும் பந்தயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.
236 நாட்களில் இதனை நிறைவு செய்த இவர், கோல்டன் குளோப் பந்தயத்தை நிறைவு செய்த முதல் இந்தியர் மற்றும் முதல் ஆசியர் என்ற பெருமையினையும் பெற்றுள்ளார்.
இதற்கு முன்னதாக, மற்றொரு கடற்படைத் தலைவரான திலிப் டோண்ட் உதவியின்றி ஆனால் இடை நிறுத்தங்களுடன் உலகைச் சுற்றி வரும் பந்தயத்தினை நிறைவு செய்து உள்ளார்.