தெற்கு சட்டீஸ்கரில் அணுக முடியாத பகுதியாக இருக்கும் அபுஜாஹமத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தினால் மத்திய ரிசர்வ் காவற் படையைச் சேர்ந்த ஏறத்தாழ 7000 வீரர்கள் பணியில் அமர்த்தப்பட விருக்கின்றனர்.
இந்தக் காடுகள் வருவாய் வரைபடத்தில் கூட குறிப்பிடப் படவில்லை. இந்த அடர்ந்த காடுகள் மாவோயிஸ்டுகளினால் மறைவிடப் பகுதிகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
பாதுகாப்பு படைகள் அங்கு வலுவான தடுப்பை ஏற்படுத்தி, மாவோயிஸ்டுகளை வெளியேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.