கம்போடியாவின் இளவரசியும் அந்நாட்டின் முன்னாள் கலாச்சாரத் துறை அமைச்சருமான நோரோடோம் போபா தேவி (76) என்பவர் காலமானார்.
1970களில் அப்சரா நடனத்தை மீண்டும் உயிர்ப்பித்ததற்காக இவர் அங்கீகரிக்கப் படுகின்றார்.
உலகப் பாரம்பரிய வகையில் பட்டியலிடப்பட்ட அப்சரா நடனமானது கம்போடியாவில் 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக நிகழ்த்தப்பட்டு வருகின்றது. நடனக் கலைஞர்களின் தோற்றங்கள் அங்கோரியன் கோயில் சுவர்களில் காணப்படுகின்றன.