அமிதாப் பச்சனுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்படும் என்று மத்தியத் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் தெரிவித்துள்ளார்.
புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான தாதசாகேப் பால்கேவின் நினைவாக தாதாசாகேப் பால்கே விருது ஏற்படுத்தப்பட்டது.
இது சினிமாத் துறையில் இந்தியாவின் மிக உயர்ந்த விருதாகும். இது 1969 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
இந்த விருதை முதன்முதலில் பெற்றவர் தேவிகா ராணி ஆவார்.