TNPSC Thervupettagam

அமெரிக்கா, இந்தியா இணைந்து நடத்தும் உலகத் தொழில்முனைவோர் உச்சி மாநாடு

September 30 , 2017 2484 days 783 0
  • அமெரிக்கா மற்றும் இந்தியா இணைந்து நடத்தும் உலகத் தொழில்முனைவோர் உச்சி மாநாடு வரும் நவம்பர் மாதம் ஹைதராபாத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு சார்பில் நிதி ஆயோக் இந்த உச்சி மாநாட்டுக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
  • மகளிருக்கு முன்னுரிமை, எல்லோருக்கும் வளம், உலக வளர்ச்சிப் பாதையில் மகளிரின் முக்கியமான பங்களிப்பை முன்னிலைப்படுத்துவது ஆகியவை இந்த மாநாட்டின் முக்கிய மையப் பொருளாகும்.
  • இந்த ஆண்டின் மாநாட்டில், மகளிர் தொழில்முனைவோர் மற்றும் அவர்களின் அபாரமான ஆற்றல் மையப்படுத்தப்படும்.
  • 2017 ஆம் ஆண்டில் முக்கியத்துவம் அளிக்கப்படும் பகுதிகள்,
    • சுகாதார பராமரிப்பு மற்றும் வாழ்க்கை அறிவியல்
    • டிஜிட்டல் பொருளாதாரம்
    • பொருளாதார தொழில்நுட்பம்
    • ஊடகம் மற்றும் கேளிக்கைகள்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்