அமெரிக்க இராணுவமானது ஈரானின் இராணுவத் தளபதியான ஜெனரல் காசிம் சுலைமானியைப் படுகொலை செய்துள்ளது.
ஈராக்கில் உள்ள பாக்தாத் விமான நிலையத்தில் அவர் கொல்லப்பட்டார்.
அவர் குட்ஸ் படையின் தலைவராக இருந்தார்.
குட்ஸ் என்பது ஜெருசலேம் என்ற சொல்லின் அரபு வார்த்தையாகும்.
இது ஈரானியப் புரட்சிகரக் காவல்படையின் வெளிநாட்டு செயல்பாட்டுப் பிரிவு (Iranian Revolutionary Guards Corps - IRGC) மற்றும் அமெரிக்காவால் வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்பு என்று நிர்ணயிக்கப் பட்ட ஒரு படைப் பிரிவு ஆகும்.
ஈரானியப் புரட்சி முடிவுக்கு வந்த பின்னர் அமைக்கப்பட்ட புதிய ஈரானிய அரசாங்கத்தின் இஸ்லாமிய ஒழுங்கைப் பாதுகாப்பதற்காக 1979 ஆம் ஆண்டில் அயதுல்லா ருஹொல்லா கோமெய்னி என்பவர் IRGC அமைப்பை உருவாக்கினார்.