இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையம் (IWAI) மற்றும் அமேசான் தனியார் விற்பனை சேவை லிமிடெட் நிறுவனம் (Amazon) ஆகியவை ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளன.
இது உள்நாட்டு நீர்வழிகள் - குறிப்பாக கங்கை நதியைப் பயன்படுத்துகின்ற (தேசிய நீர்வழி 1) - மூலமான சரக்குப் போக்குவரத்து மற்றும் வாடிக்கையாளர் ஏற்றுமதி மற்றும் பொருட்களைக் கொண்டு செல்வதை மேம்படுத்தச் செய்வதில் கவனம் செலுத்துகிறது.
இந்தக் கூட்டாண்மையானது, இரயில், விமானம், நீர் மற்றும் நிலம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து வகையான போக்குவரத்து முறைகளையும் பயன்படுத்துவதற்கு அமேசான் நிறுவனத்திற்கு அனுமதி வழங்குகிறது.
மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் ஆனது, 2047 ஆம் ஆண்டு அம்ரித் கால் தொலைநோக்குத் திட்டத்தின் படி, 2030 ஆம் ஆண்டளவில் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தைக் கணிசமாக அதிகரிக்கவும், 2047 ஆம் ஆண்டிற்குள் 500 மில்லியன் மெட்ரிக் டன் அளவை (MMT) மிஞ்சுவதற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2047 ஆம் ஆண்டிற்குள், செயல்பாட்டில் உள்ள நீர்வழிகளின் எண்ணிக்கை 50 என்ற அளவை விஞ்சும் நோக்கத்துடன், 2030 ஆம் ஆண்டிற்குள் செயல்பாட்டில் உள்ள நீர் வழிகளின் எண்ணிக்கையை 23 என்ற அளவிற்கு அதிகரிக்கும் இலக்கும் இந்தத் திட்டத்தில் அடங்கும்.