TNPSC Thervupettagam

அமைச்சர்களின் வீடுகளுக்கு வாடகை

June 13 , 2024 35 days 139 0
  • தமிழக அரசானது, அமைச்சர்கள் அவர்களுக்குச் சொந்தமான அல்லது குத்தகைக்கு எடுக்கப்பட்ட தனியார் வீடுகளில் தங்கியிருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு வழங்கப் படுகின்ற வாடகைத் தொகையினை சமீபத்தில் உயர்த்தியுள்ளது.
  • இந்த இரு வகைகளின் கீழ், அவர்களுக்கு வழங்கப்படும் வாடகைத் தொகையானது, மாதத்திற்கு 70,000 ரூபாயிலிருந்து 1.5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • சபாநாயகர், துணை சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தலைமைக் கொறடா ஆகியோருக்கும் இது பொருந்தும்.
  • எட்டு ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு வாடகைத் தொகையில் திருத்தம் செய்யப் பட்டுள்ளது.
  • முந்தைய திருத்தமானது 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், அப்போதைய மாநில அரசு அமைச்சர்களுக்கு வழங்கும் வாடகையை மாதத்திற்கு 20,000 ரூபாயிலிருந்து 70,000 ரூபாயாக உயர்த்தியது.
  • மாநில அரசு வழங்கும் வீட்டில் அவர்கள் தங்கியிருந்தால் அவர்களுக்கு வீட்டு வாடகை கொடுப்பனவு வழங்கப் படாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்