நகரங்களில் அமைந்துள்ள ஈரநிலங்களின் மீதான உகந்தப் பயன்பாட்டினை அதிகரிக்கச் செய்வதற்காகவும், அவற்றின் பல்லுயிர்ப் பெருக்கத்தை மேம்படுத்தச் செய்வதற்காகவும் அம்ரித் தரோஹர் திட்டத்தினை இந்திய அரசு அறிமுகப் படுத்தி உள்ளது.
இந்தத் திட்டமானது, உள்ளூர்ச் சமூகங்களின் உதவியுடன் நிலையான சுற்றுச்சூழல் மேம்பாட்டினை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது இந்த ஆண்டின் நிதி நிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏழு முன்னுரிமை அம்சங்களில் ஒன்றான ‘பசுமை மேம்பாடு' என்பதன் கீழ் குறிப்பிடப்படுகிறது.
இத்திட்டமானது, அடுத்த மூன்று ஆண்டுகளில் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்தத் திட்டமானது, சுற்றுச்சூழல் சார்ந்தச் சுற்றுலா மற்றும் கார்பன் பங்குகள் ஆகியவற்றை அதிகரிக்கச் செய்வதோடு, அவை உள்ளூர்ச் சமூகங்களின் வருமான உருவாக்கத்திற்கும் உதவும்.