நாடு முழுவதும் உள்ள 508 இரயில் நிலையங்களின் மறுசீரமைப்புப் பணிகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
இது இரயில் நிலையங்களின் மறுசீரமைப்பினைச் செயலாக்கும் ஒரு திட்டமாகும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட சில ரயில் நிலையங்களின் உள்கட்டமைப்பைத் தொடர்ச்சியான அடிப்படையில் மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
அடையாளம் காணப்பட்ட இந்த 508 நிலையங்களில் குஜராத்தில் உள்ள 87 நிலையங்கள், ராஜஸ்தானில் உள்ள 83 நிலையங்கள், மத்தியப் பிரதேசத்தில் உள்ள 80 நிலையங்கள் மற்றும் ஹரியானாவில் உள்ள 34 நிலையங்கள் ஆகியவை அடங்கும்.
மொத்தமுள்ள 1,309 இரயில் நிலையங்களில், 508 இரயில் நிலையங்கள் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மறுசீரமைப்பின் ஆரம்பக் கட்டப் பணிக்காகத் தேர்வு செய்யப் பட்டு உள்ளன.
இந்த இரயில் நிலையங்கள் ஆந்திரப் பிரதேசம், குஜராத், ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு ஆகிய 10 மாநிலங்களில் அமைந்துள்ளன.
தமிழகத்தின் சென்னை எழும்பூர் இரயில் நிலையமும் இதில் அடங்கும்.