94 வயதான, புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் பால்கிருஷ்ணா விட்டல்தாஸ் தோஷிக்கு, 2022 ஆம் ஆண்டின் மதிப்புமிக்க ராயல் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.
கட்டிடக்கலைத் துறைக்கான உலகில் மிக உயரிய கௌரவமாக இது கருதப்படுகிறது.
கட்டிடக்கலை துறையில் ஒரு குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு நபரின் வாழ்நாள் அளவிலான சிறப்பானப் பணியை அங்கீகரித்து கௌரவிப்பதற்காக இந்த விருது வழங்கப் படுகிறது.
2018 ஆம் ஆண்டில், பிரிட்ஸ்கர் கட்டிடக்கலை பரிசைப் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை இவர் பெற்றார்.
இந்திய அரசானது, 2020 ஆம் ஆண்டில் இவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கியது.