TNPSC Thervupettagam

அரசியல்/பொது வாழ்வில் நன்னடத்தைக்கான காயிதே மில்லத் விருது

February 10 , 2024 142 days 470 0
  • 2023 ஆம் ஆண்டிற்கான அரசியல் / பொது வாழ்வில் நன்னடத்தைக்கான காயிதே மில்லத் விருதை மூத்தப் பத்திரிகையாளர் N. ராம் மற்றும் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் அபுசலேஹ் ஷெரீப் ஆகியோர் வென்றுள்ளனர்.
  • சச்சார் குழு அறிக்கையை தயாரிப்பதில் ஷெரீப் ஆற்றிய பங்கிற்காக வேண்டி இந்த விருதினை அவர் பெற்றுள்ளார்.
  • முன்னதாக, தி வயர் மற்றும் கி.வீரமணி ஆகியோருக்கு 2022 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கப்பட்டது.
  • இந்த விருது ஆனது, பிரபல தென்னிந்தியத் தலைவரான காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் சாஹேப்பின் நினைவாக 2015 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • சுதந்திர இந்தியா கட்டமைக்கப்பட்ட காலங்களில், மதராஸ் மாகாணத்தில் எதிர்க் கட்சித் தலைவராக அவர் பெரும் செல்வாக்கைச் செலுத்தினார்.
  • அவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் (1952-58) பணியாற்றி உள்ளார் என்பதோடு அவர் மூன்று முறை மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்