கேரள மாநிலமானது நாட்டிலேயே முதல் முறையாக அரசுக்குச் சொந்தமான இணையச் சேவையைக் கொண்டுள்ள மாநிலமாக மாறியுள்ளது.
கேரள ஒளியிழைக் கட்டமைப்பு நிறுவனத்தின் (K-Fon) தகவல் தொழில்நுட்ப உள் கட்டமைப்புத் திட்டத்திற்கு இணையச் சேவை வழங்குநர் உரிமத்தை தொலைத் தொடர்புத் துறை வழங்கியுள்ளது.
கேரள ஒளியிழைக் கட்டமைப்பு நிறுவனம் என்பது டிஜிட்டல் உபயோகத்தில் உள்ள இடைவெளியை அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட மாநில அரசின் ஒரு முன்னெடுப்பாகும்.