TNPSC Thervupettagam

அருணாச்சலப் பிரதேசம்

April 9 , 2019 1931 days 549 0
  • இந்திய இராணுவமானது அருணாச்சலப் பிரதேசத்தின் ரோயிங் மாவட்டத்தில் இரண்டாம் உலகப் போரின் போது விபத்துக்குள்ளான அமெரிக்க விமானப் படை விமானத்தின் உதிரி பாகங்களை மீட்டுள்ளது.
  • இந்தியாவிலிருந்து சீனாவிற்கு “ஹம்ப்” (திமில் போன்ற பகுதி) என்ற வழியைக் கடக்கும் போது ஏற்பட்ட விமான விபத்தில் 400 அமெரிக்க வீரர்கள் காணாமல் போனதாக நம்பப் படுகின்றது.
  • இமயமலையில் உள்ள ஹம்ப் ஆனது ஜப்பானிய வீரர்களால் மியான்மர் கைப்பற்றப்பட்டப் பின்பு, இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் இந்தியா மற்றும் சீனாவுக்கிடையே முக்கிய விநியோகப் பாதையாகச் செயல்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்