TNPSC Thervupettagam

அரேபியக் கடலில் உருவான புயல்கள்

November 4 , 2019 1721 days 611 0
  • 1965 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல்முறையாக, அரேபியக் கடலில் இரண்டு புயல்கள் - கியார் புயல் மற்றும் மஹா புயல் - ஒரே நேரத்தில் உருவாகியுள்ளன.
  • கியார் புயலானது 2007 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கோனு புயலுக்குப் பிறகு உருவான இரண்டாவது வலிமை வாய்ந்த புயல் ஆகும்.
  • அரேபியக் கடலுடன் ஒப்பிடும் போது வங்காள விரிகுடாவில் புயல்கள் உருவாவது  அடிக்கடி நிகழ்கிறது.
  • 2019 ஆம் ஆண்டில், அரேபியக் கடலில் நான்கு புயல்கள் உருவாகியுள்ளன.
  • ஒடிசாவில் பெரிய அழிவை ஏற்படுத்திய ஃபானி புயலானது 2019 ஆம் ஆண்டில் வங்காள விரிகுடாவில் கடைசியாக உருவான புயல் ஆகும்.

புயலுக்குப் பெயரிடுதல்

  • ஃபானி புயல் வங்க தேசத்தால் பெயரிடப் பட்டது.
  • கியார் புயல் மியான்மரால் பெயரிடப் பட்டது.
  • மஹா புயல்  ஓமன் நாட்டினால் பெயரிடப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்