மருத்துவ மற்றும் நறுமணத் தாவரங்களின் விளைச்சலை ஊக்குவிப்பதற்காக “அரோமா திட்டம்” என்ற ஒரு புதிய திட்டத்தை மேகாலயா முதல்வர் கான்ராட் K. சங்மா துவங்கி வைத்தார்.
மருத்துவம் மற்றும் நறுமணத் தாவரங்களின் விளைச்சலுக்கு கூட்டாக இணைந்து பணியாற்றுவதற்காக - மத்திய மருத்துவ மற்றும் நறுமணத் தாவரங்கள் நிறுவனம் (Central Institute of Medicinal and Aromatic Plants - CIPAM) மற்றும் மேகாலயா வடிநில வளர்ச்சி ஆணையம் (Meghalaya Basin Development Authority) ஆகியவற்றிற்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.
CIPAM நிறுவனமானது அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றத்தின் (CSIR) முன்னிலை தாவர ஆராய்ச்சி ஆய்வகமாகும்.