இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமானது (BCCI - Board of Control for Cricket in India) முகமது சமி, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா மற்றும் பூனம் யாதவ் ஆகியோரை அர்ஜுனா விருதுக்காகப் பரிந்துரை செய்துள்ளது.
அர்ஜுனா விருதின் நோக்கமானது சர்வதேச அளவில் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கௌரவிப்பதாகும்.
இது மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் வழங்கப்படுகின்றது.
இது 1961-ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
அர்ஜுனா விருதினைப் பெற்ற முதலாவது கிரிக்கெட் வீரர் சலீம் துரானி ஆவார்.
இதுவரை 53 கிரிக்கெட் வீரர்கள் அர்ஜுனா விருதினைப் பெற்றுள்ளனர்.
விருதுக்கான தகுதி நிலைகள்
கடந்த 4 ஆண்டுகளில் சர்வதேச அளவில் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்துதல்.
தலைமைத்துவப் பண்பு, விளையாட்டு வீரருக்குரிய தகுதி நிலைகள் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றை வெளிப்படுத்துதல்.
எந்த ஒரு நபரும் இரண்டாவது முறையாக இந்த விருதினைப் பெறவில்லை.