அர்ஜென்டினா, கேமரூன், சீனா, எகிப்து மற்றும் செர்பியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஐந்து இளம் அறிவியலாளர்கள் யுனெஸ்கோ அமைப்பின் அல் ஃபோசன் சர்வதேசப் பரிசினைப் பெற்றுள்ளனர்.
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) ஆகிய துறைகளில் இளம் அறிவியலாளர்களை ஊக்குவிப்பதற்காக இந்தப் பரிசானது வழங்கப்படுகிறது.
இது சவூதி அரேபியாவில் உள்ள அல்-ஃபோசான் என்ற அறக்கட்டளையுடன் இணைந்து யுனெஸ்கோ அமைப்பினால் 2021 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்தப் பரிசானது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை என்று வழங்கப்படும் பரிசாக உள்ள நிலையில் இந்த ஆண்டு வழங்கப் படும் பரிசானது முதலாவது அல் ஃபோசன் சர்வதேசப் பரிசாகும்.