பாலக்காடு மலைப்பகுதியில் ஆல்மேனியா மல்டிஃப்ளோரா என்ற புதிய தாவர இனம் கண்டுபிடிக்கப் பட்டது.
ஆல்மேனியா மல்டிஃப்ளோரா என்பது ஆல்மேனியா இனத்தைச் சேர்ந்த ஒரு புதிய இனமாகும்.
இது உலகில் காணப்படும் ஆல்மேனியா இனத்தினனைச் சேர்ந்த இரண்டாவது இனம் ஆகும்.
இந்தப் புதிய இனமானது, அந்த தாவரக் குடும்பம் மற்றும் அதன் முதல் இனமான அல்மேனியா நோடிஃப்ளோரா கண்டுபிடிக்கப்பட்டு விவரிக்கப்பட்ட 188 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப் பட்டது.
புதிய இனங்கள் அடையாளம் காணப்படுவதற்கு முன்பு, ஆல்மேனியா நோடிஃப்ளோரா மட்டுமே ஆல்மேனியா இனத்தின் ஒரே இனமாக நம்பப்பட்டது.
ஆல்மேனியா நோடிஃப்ளோரா 1753 ஆம் ஆண்டில் செலோசியா நோடிஃப்ளோரா என செலோசியா இனத்தின் கீழ் ஒன்றாக வெளியிடப்பட்டது.
இது பின்னர் 1834 ஆம் ஆண்டில் ஆல்மேனியா நோடிஃப்ளோரா என குறிப்பிடப்பட்டது.
இவை இந்திய துணைக்கண்டம் முதல், சீனா, மேற்கு மற்றும் மத்திய மலேசியா வரை பரவியுள்ளது.