முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி திருவண்ணாமலையைச் சேர்ந்த ஆர்.கண்ணகி என்பவருக்கு நடப்பு ஆண்டிற்கான தமிழக அரசின் அவ்வையார் விருது வழங்கி கௌரவித்தார்.
18 ஆண்டுகளுக்கும் மேலாக கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக இவர் ஆற்றிய பணிகளை அங்கீகரித்து இந்த விருதானது இவருக்கு வழங்கப் பட்டுள்ளது.
இடுகாட்டு உதவியாளரான கண்ணகி என்பவர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெண்களின் சுய உதவிக் குழுக்களினரிடையே (Self-Help groups - SHGs) சிறப்பாக அறியப் படுகின்றார்.