கோரக்பூரில் ஷாஹீத் அஷ்பகுல்லா கான் என்று பெயரிடப்பட்ட ஒரு விலங்கியல் பூங்காவினை நிறுவும் திட்டத்திற்கு உத்தரப் பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.
தற்போது, உத்தரப் பிரதேசத்தில் லக்னோ மற்றும் கான்பூர் ஆகிய இடங்களில் இரண்டு விலங்கியல் பூங்காக்கள் உள்ளன.
1925 ஆம் ஆண்டில் காகோரி சதி என்று பொதுவாக அறியப்படும் காகோரி ரயில் கொள்ளைச் சம்பவத்தின் காரணமாக ராம் பிரசாத் பிஸ்மில் என்பவருடன் சேர்த்து சுதந்திரப் போராட்ட வீரரான அஷ்பகுல்லா கானுக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டது.