பாதுகாப்புத் துறை அமைச்சகமானது, காஜியாபாத்தில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்துடன் இணைந்து LLTR எனப்படும் தாழ் மட்டத்திலான ரேடார் கருவியினை (அஸ்வினி) கொள்முதல் செய்வதற்காக ஒரு மூலதனக் கையகப்படுத்தல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
LLTR (அஸ்வினி) என்பது அதிநவீன திட-நிலை தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்ட ஒரு செயலில் உள்ள மின்னணு முறையில் ஊடுகதிர் ஆய்வு செய்யப்பட்ட நிலை சார் தொகுப்பு ரேடார் ஆகும்.
இந்த ரேடார் கருவியானது, அதிவேக போர் விமானங்கள் முதல் ஆளில்லா வான்வழி வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் போன்ற மித வேகத்தில் நகரும் இலக்குகள் வரையிலான வான்வழி இலக்குகளைக் கண்காணிக்கும் திறன் கொண்டது.
இதன் கொள்முதல் ஆனது, இந்திய விமானப்படையின் செயல்பாட்டுத் தயார் நிலை என்பதைக் கணிசமாக மேம்படுத்தும்.