TNPSC Thervupettagam

ஆக்ஸ்பாம் வருடாந்திர செல்வ நிலை ஆய்வறிக்கை - 2019

January 26 , 2019 2035 days 586 0
  • 2019 ஆண்டிற்கான ஆக்ஸ்பாம் வருடாந்திர செல்வ நிலை ஆய்வறிக்கையானது டாவோஸில் உலகப் பொருளாதார மன்றத்தின் துவக்கத்தை குறிக்கும் பொருட்டு வெளியிடப்பட்டுள்ளது.
  • உலகில் வறுமையில் உள்ளவர்களில் பாதியளவுத் தொகையான 3.8 பில்லியன் மக்களின் சொத்துக்களுக்கு சமமான சொத்துக்களை 26 செல்வந்தர்கள் கொண்டுள்ளனர்.
  • இந்த செல்வந்தர்கள் 2018-ல் மிக பணக்காரர்களாக உயர்ந்தும் ஏழைகள் மிகவும் ஏழைகளாகவும் மாறியுள்ளனர். மேலும் இந்த மிகப்பெரிய இடைவெளியானது வறுமைக்கு எதிரான போராட்டத்தைத் தடுக்கின்றது.
  • கடந்த 10 ஆண்டுகளில் பில்லியனர்களின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்துள்ளது.
  •  2017-2018 ஆம் ஆண்டுகளில் ஒவ்வொரு 2 நாட்களுக்கும் ஒரு புதிய கோடீஸ்வரர் உருவாக்கப்பட்டுள்ளனர்.
  • இந்தியாவின் முன்னணி 1% பணக்காரர்கள் 39% அளவில் அதிக செல்வந்தராகியுள்ளனர். ஆனால் கீழ்நிலையில் உள்ள பாதிக்கும் மேலான மக்கள்தொகைக்கு வெறும் 3% அளவிலேயே செல்வம் அதிகரித்துள்ளது.
  • இந்தியாவில் உள்ள பில்லியனர்களின் செல்வமானது கடந்த ஆண்டில் நாளொன்றுக்கு 2200 கோடி ரூபாய் அளவிற்கு அதிகரித்துள்ளது.
  • இந்தியாவின் முன்னணி  பணக்காரர்களில் 10 சதவிகிதத்தினர் ஒட்டுமொத்த நாட்டின் வளத்தில் 77.4 சதவிகிதத்தைக்  கொண்டுள்ளனர்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்