2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், ஆசிய பசிபிக் தபால் ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பினை இந்தியா ஏற்றுள்ளது.
இந்தியாவின் இந்த நான்கு ஆண்டு கால ஆட்சிக் காலத்தில், இந்த ஒன்றியத்தின் பொதுச் செயலாளராக டாக்டர் வினயா பிரகாஷ் சிங் பொறுப்பேற்க உள்ளார்.
இது ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 32 உறுப்பினர் நாடுகளை உள்ளடக்கிய ஒரு அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும்.
இதன் தலைமையகம் தாய்லாந்தின் பாங்காக் நகரில் அமைந்துள்ளது.
உறுப்பினர் நாடுகளுக்கு இடையேயான அஞ்சல் சேவை சார்ந்த உறவுகளை விரிவு படுத்துதல், எளிதாக்குதல் மற்றும் மேம்படுத்துதல் மற்றும் அஞ்சல் சேவைத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.