இந்தியக் கிராண்ட்மாஸ்டர் D. குகேஷுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நடைபெற்ற ஆசியச் சதுரங்கக் கூட்டமைப்பின் வருடாந்திரக் கூட்டத்தில் ஆண்டின் சிறந்த வீரருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மகாபலிபுரத்தில் நடைபெற்ற 44வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டியில் 9/11 என்ற கணக்கில் சாதனை அளவில் வெற்றி பெற்று, தங்கப் பதக்கத்தை வென்றச் செய்தற்காக வேண்டி இந்த விருதானது வழங்கப்படுகிறது.
சென்னையில், FIDE சதுரங்க ஒலிம்பியாட் போட்டியை வெற்றிகரமாக நடத்தியதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஆண்டின் சிறந்த நாயகன் விருதானது வழங்கப் பட்டுள்ளது.
கோனேரு ஹம்பி, D.ஹரிகா, R .வைஷாலி, டானியா சச்தேவ் மற்றும் பக்தி குல்கர்னி ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் அணி, 'ஆண்டின் சிறந்த மகளிர் அணி' என்ற விருதினை வென்றது.
கிராண்ட் மாஸ்டர் R.B.ரமேஷ் வீரர்களுக்கான ஆண்டின் சிறந்தப் பயிற்சியாளர் என்ற விருதை வென்றார்.
கிராண்ட் மாஸ்டர் அபிஜித் குண்டே, வீராங்கனைகளுக்கான ஆண்டின் சிறந்தப் பயிற்சியாளர் என்ற விருதை வென்றார்.
அகில இந்தியச் சதுரங்கக் கூட்டமைப்பு (AICF) ஆனது ‘மிகவும் செயல்பாடு மிக்க ஒரு கூட்டமைப்பு’ என்ற விருதைப் பெற்றது.