இந்த மாநாட்டின் போது போகர் இலக்குகளுக்கு (Bogor Goals) மாற்றாக புதிய 20 ஆண்டு கால வளர்ச்சிக்கான ஒரு தொலைநோக்குப் பார்வையான ‘புட்ராஜ்ஜியா தொலைநோக்குப் பார்வை – 2040 (Putrajaya Vision 2040)’ என்ற ஒரு கொள்கை ஆனது ஏற்றுக் கொள்ளப் பட்டது.
இந்தக் காணொலி வாயிலான மாநாட்டிற்குப் பிறகு APEC தலைவர்கள் கோலாலம்பூர் பிரகடனத்தை வெளியிட்டுள்ளனர்.
2020 ஆம் ஆண்டில் இந்த மாநாடானது மலேசியாவினால் நடத்தப்பட்டது.
இந்த மாநாட்டின் அதிகாரப்பூர்வக் கருத்துரு “பகிரப்பட்ட வாய்ப்புகளின் மீதான செழுமையான எதிர்காலத்தை நோக்கி மனிதர்களின் சாத்தியக் கூறுகளை மேம்படுத்துதல் : ஒரு முன்னிலை மற்றும் முன்னுரிமைச் செயல்பாடு” என்பதாகும்.
APEC என்பது பசிபிக் பகுதியில் உள்ள 21 உறுப்பினர் பொருளாதார நாடுகளைக் கொண்ட அரசாங்கங்களுக்கிடையேயான ஒரு மன்றமாகும். இது ஆசியா-பசிபிக் பகுதி முழுவதும் தடையற்ற வர்த்தகத்தை ஊக்குவிக்கின்றது.
APEC ஆனது சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு 1989 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.