2020 ஆம் ஆண்டு மார்ச் 14 அன்று நடைபெற இருந்த தென்கிழக்கு ஆசிய நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பை ஒத்தி வைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பில் உள்ள 10 உறுப்பு நாடுகளின் (Association of Southeast Asian Nations - ASEAN) தலைவர்களை லாஸ் வேகாஸில் சந்திப்பதற்காக அழைத்திருந்தார்.
கொரோனா வைரஸானது அமெரிக்காவில் வேகமாகப் பரவும் என்ற அச்சத்தின் காரணமாக இந்த முடிவு மேற்கொள்ளப் பட்டுள்ளது.