TNPSC Thervupettagam

ஆசியாவின் மிகப்பெரிய சொட்டுநீர் பாசனத் திட்டம்

January 30 , 2018 2362 days 856 0
  • இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த நீர் மேலாண்மை நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன் கர்நாடக மாநிலத்தில் ராம்தால் மரோலா சொட்டுநீர் பாசனத் திட்டம்  (Drip Irrigation Project) செயல்படுத்தப்பட்டுள்ளது.
  • இதுவே ஆசியாவின் மிகப்பெரிய சொட்டுநீர் பாசனத் திட்டமாகும்.
  • இந்த சொட்டுநீர் பாசனத்திட்டத்தின் ஒரு பகுதியாக, தத்தமது வேளாண் நிலங்களில் நிறுவப்பட்டுள்ள நீர் வழங்கு உருளைகள்  (Water Cylinders) மூலம் அனைத்து விவசாயிகளும் தங்களது  வேளாண் நிலத்திற்கு தேவையான நீரைப் பெறுவர்.
  • இந்த நீர் வழங்கு உருளையில் வேதியியல் உரங்களையும் (Fertlizers) பூச்சிக் கொல்லிகளையும் கலக்க இயலும் என்பதால் சொட்டு நீர் பாசனத்தின் வழியே உரமிடுவதும், பூச்சிக் கொல்லி தெளிப்பதும் சாத்தியமாகும்.
  • கிருஷ்ணா ஆற்றின் உப்பங்கழி (Back waters) பகுதிகளில் கலக்கும் கழிவுநீரை சுத்திகரிக்கும் தொழிற் நுட்ப வசதிகளும்  இந்தத் திட்டத்தில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்