இது டாக்டர் சர்வப் பள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை நினைவு கூர்கிறது.
இவர் 1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி தமிழ்நாட்டின் திருத்தணியில் பிறந்தார்.
இவர் ஒரு புகழ்பெற்ற அறிஞர், பாரத ரத்னா (1954) விருது பெற்றவர், சுதந்திர இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவர் மற்றும் இரண்டாவது குடியரசுத் தலைவர் ஆவார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பதவியைக் கொண்ட முதல் இந்தியர் இவர் ஆவார் (1936-1952).
இவர் 1948 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் நிர்வாகக் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.
தேசிய ஆசிரியர் விருதுகள் இந்திய ஜனாதிபதியால் சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு வழங்கப் படுகின்றன.