TNPSC Thervupettagam

ஆண்டிடைப் போக்குகள் அறிக்கை 2021

December 4 , 2021 960 days 494 0
  • அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையமானது இந்த அறிக்கையை வெளியிட்டது.
  • 2021 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் ஏற்பட்ட மோதல் மற்றும் வன்முறைகளின் காரணமாக 33 நாடுகளில் 50.9 மில்லியன் மக்கள் உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்து உள்ளனர் என்று இந்த அறிக்கை கூறுகிறது.
  • 84 மில்லியனைக் கடந்த அளவில் உலகளாவிய எண்ணிக்கையுடன் அதிகரித்து வரும் சூழ்நிலைக் கட்டாயத்தினால் இடம் பெயரும் போக்கானது (2020 ஆம் ஆண்டிலிருந்து) 2021 ஆம் ஆண்டிலும் தொடர்ந்தது.
  • 2020 ஆம் ஆண்டின் இறுதியிலிருந்த 82.4 மில்லியன் என்ற அளவிலிருந்து இந்த எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
  • இது பெரும்பாலும் உள்நாட்டு இடம் பெயர்தலால் ஏற்பட்டதாகும்.
  • புதிய உள்நாட்டு இடம்பெயர்தலில் பெரும்பாலானவை ஆப்பிரிக்காவில் நிகழ்ந்தன.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்