இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பொறியாளர் மற்றும் பொழுதுபோக்கு புகைப்படக் கலைஞர் கார்த்திக் சுப்ரமணியத்தின் புகைப்படம் ஆனது நேஷனல் ஜியோகிராஃபிக் ஊடகத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான 'ஆண்டின் சிறந்த புகைப்படம்' என்ற போட்டியில் முதலிடம் பிடித்துள்ளது.
"டான்ஸ் ஆஃப் தி ஈகிள்ஸ்" என்று தலைப்பிடப்பட்ட அவரது புகைப்படம் ஆனது அலாஸ்காவில் உள்ள சில்காட் பால்ட் கழுகு வளங்காப்பகத்தில் எடுக்கப்பட்டது.
மேலும் உலகளவில் உள்ள ஒன்பது புகைப்படக் கலைஞர்களும் தங்கள் புகைப் படங்களுக்காக அங்கீகாரத்தினைப் பெற்றனர்.