TNPSC Thervupettagam

ஆண்டின் டிஜிட்டல் தலைவர் விருது – 2018

May 26 , 2018 2277 days 668 0
  • புது தில்லியில் நடைபெற்ற 2018-ஆம் ஆண்டின் வணிக உலக டிஜிட்டல் இந்தியா மாநாடு மற்றும் விருதுகள் நிகழ்ச்சியில் ஆண்டின் டிஜிட்டல் தலைவர் விருது ஆந்திரப் பிரதேச தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மற்றும் பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக மேம்பாட்டு அமைச்சரான நாரா லோகேசுக்கு வழங்கப்பட்டுள்ளது.

  • நிர்வாக ஆளுகையில் சிறந்த வகையில் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தியமைக்காக நாரா லோகேசுக்கு “வணிக உலகம்” எனும் இதழ் இவ்விருதினை அறிவித்துள்ளது. பஞ்சாயத்து ராஜ், ஊரக மேம்பாடு, ஊரக நீர் விநியோகிப்பு துறை போன்றவற்றை சிறந்த நவீன தொழில்நுட்பத்தினை பயன்படுத்தியமைக்காகவும், அதன் மூலம் சிறந்த முடிவுகளை ஏற்படுத்தியதற்காகவும் லோகேசுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
  • மேலும் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் மாநில பஞ்சாயத்து மற்றும் ஊரக நீர் விநியோகத் துறையின் அதிகாரிகளுக்கு நீர் விநியோகத் திட்டத்திற்கு அதிநவீன கண்காணிப்புப் பின்தொடரல் அமைப்பினை பயன்படுத்தியதற்காக மற்றுமொரு விருது வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்