TNPSC Thervupettagam

ஆத்ம நிர்பர் தோட்டக்கலை தூயத் தாவரத் திட்டம்

February 4 , 2023 816 days 399 0
  • அதிக மதிப்புள்ள தோட்டக்கலைப் பயிர்களை உருவாக்குவதற்காக வேண்டி நோய்த் தாக்கமற்ற, தரமான தாவரப் பொருள் கிடைக்கப் பெறுவதனை அதிகரிப்பதற்காக, ஆத்மா நிர்பர் தூயத் தாவரத் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
  • ஒரு தூய்மையான தாவரம் என்பது நடவு செய்வதற்கு முன் பல பரிமாணங்களில் சோதிக்கப் பட்ட ஒரு தாவரமாகும்.
  • முதலில், தாவரங்களில் நோய்க் கிருமிகளால் பாதிக்கப்பட்டுள்ளனவா என சோதிக்கப் படுகின்றன.
  • இரண்டாவதாக, செழுமையாக வளர்ந்து வரும் தாவரங்கள் அடையாளம் காணப் படுகின்றன.
  • செழுமையாக வளரும் தாவரங்களிலிருந்து திசு மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன.
  • இந்த திசுக்கள் மற்ற தாவரங்களுடன் இணைக்கப்பட்டு அவற்றின் உற்பத்தித் திறனும் அதிகரிக்கப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்