ஆந்திரப் பிரதேசத்தின் ஆளுநரான பிஸ்வா பூஷன் ஹரிசந்தன் ஆந்திரப் பிரதேச அனைத்துப் பகுதிகளின் பரவலாக்கம் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சி மசோதா, 2020 என்ற மசோதாவிற்கு தனது ஒப்புதலை வழங்கியுள்ளார்.
பரவலாக்கல் மசோதாவிற்கு வழங்கப்பட்ட அனுமதியானது அமராவதி, கர்நூல் மற்றும் விசாகப்பட்டினத்தை சட்டமன்றம், நீதித் துறை மற்றும் நிர்வாகம் சார்ந்த தலைநகர்களாக மேம்படுத்த வழிவகை செய்கின்றது.