ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகர் ஆனது விசாகப்பட்டினத்திற்கு மாற்றப்படும் என்று அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டில் இருந்த முந்தைய அரசானது, அமராவதியை மாநிலத் தலைநகராக அறிவித்து புதியத் தலைநகரைக் கட்டமைப்பதற்காக நிலங்களைக் கையகப் படுத்தும் பணிகளை மேற்கொண்டது.
2019 ஆம் ஆண்டில், ரெட்டி அவர்கள் முதன் முதலில் "பரவலாக்கப்பட்ட மேம்பாடு" என்ற ஒரு கருத்தாக்கத்தினை முன்மொழிந்து, மாநிலத்தில் மூன்று தலைநகரங்களை நிறுவுவதற்கான ஒரு திட்டத்தினை முன்வைத்து, பின்னர் அதனை ரத்து செய்தார்.