ஆந்திரப் பிரதேச மாநிலச் சட்டமன்றமானது அம்மாநிலத்தில் மூன்று தலைநகரங்களை நிறுவுவதற்கான மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
விசாகப்பட்டினத்தில் நிர்வாகத் தலைநகரம், அமராவதியில் சட்டமன்றத் தலைநகரம் மற்றும் கர்னூலில் நீதித்துறைத் தலைநகரம் ஆகிய மூன்று தலைநகரங்களை உருவாக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டில் தெலுங்கானா ஆந்திராவில் இருந்து பிரிக்கப்பட்ட போது, ஹைதராபாத் ஆனது இரு மாநிலங்களின் கூட்டுத் தலைநகராக, அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது.
சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக இருந்த போது, அமராவதியை ஆந்திராவின் தலைநகராக மாற்றுவதற்கு பெரும் முயற்சி எடுத்தார்.
இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களின் தலைநகர் நிலை
2000 ஆம் ஆண்டு நவம்பரில் இருந்து டேராடூன் ஆனது உத்தரகாண்ட் மாநிலத்தின் "தற்காலிகத் தலைநகரமாக" செயல்பட்டு வருகின்றது.
கெய்ர்சைன் உத்தரகாண்டின் வருங்காலத் தலைநகராக கருதப்படுகின்றது.
ஒவ்வொரு ஆண்டும் கெய்ர்சைனில் ஒரு சட்டசபை அமர்வு நடைபெறுகின்றது.
மகாராஷ்டிரா மாநிலமானது இரண்டு தலைநகரங்களைக் கொண்டுள்ளது. அவை - மும்பை மற்றும் நாக்பூர் (இது மாநில சட்டசபையின் குளிர்காலக் கூட்டத்தை நடத்துகின்றது) ஆகும்.
இமாச்சலப் பிரதேசம் சிம்லா மற்றும் தர்மசாலா (குளிர்கால சட்டசபை அமர்வு) என இரு தலைநகரங்களைக் கொண்டு உள்ளது.
முன்னாள் ஜம்மு-காஷ்மீர் மாநிலமானது ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு (குளிர்கால சட்டசபை அமர்வு) ஆகிய தலைநகரங்களைக் கொண்டிருந்தது.