திருமலைக்கு அருகிலுள்ள சேஷாசலம் காடுகளில் மிகவும் பொதுவாகக் காணப்படும் ஓர் அரிய புனுகுப் பூனை ஆனது குண்டூர் மாவட்டத்தின் ததேபள்ளி அருகே தென்பட்டு உள்ளது.
இந்தியாவில் 8 வகையான காட்டுப் புனுகுப் பூனைகள் காணப்படுகின்றன.
அனைத்து புனுகுப் பூனைகளிலும் மிக அரிதானது மலபார் பெரிய புள்ளிகள் கொண்ட புனுகுப் பூனை (விவேரா சிவெட்டினா) ஆகும். மலபார் புனுகுப் பூனை என்றும் அழைக்கப் படுகின்ற இது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படுகிறது.