இன்றைய ஆந்திர மாநிலத்தில் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்வர்ணமுகி ஆற்றின் கரையில் ஒரு கடல்சார் தொழில் மையம் இருந்ததை இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளது.
இங்கு கிடைக்கப்பட்ட செங்கற்களின் அளவுகள் கிருஷ்ணா பள்ளத்தாக்கில் ஆட்சி செய்த சாதவாஹனர்கள்/இச்சவாகு மன்னர்கள் ஆகியோர் காலத்திற்கு இணையானவை.
மேலும், விஷ்ணுவின் ஆயுதமேந்திய நான்குச் சிற்பங்களையும் இந்தக் குழு இங்கு கண்டுபிடித்துள்ளது. அதன் தலைக் கவசம் மற்றும் ஆடைகளின் பகுப்பாய்வின் படி இந்தச் சிற்பங்கள் பல்லவர் காலத்தைச் சேர்ந்தவை என அறியப் படுகின்றன.