“ஆன்டிபா” என்ற இடது சாரிக் குழுவை ஒரு தீவிரவாத அமைப்பாக அறிவிக்க இருப்பதாக அமெரிக்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஜார்ஜ் ப்ளாய்டு என்பவரின் இறப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட மிகப்பெரிய போராட்டங்களையடுத்து இந்த அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.
ஆன்டிபா/பாசிச எதிர்ப்பு அமைப்பானது ஒரு ஒற்றை அமைப்பு அல்ல. ஆனால் இது போராட்டங்களின் போது நாசிகளுக்கு ஆதரவானவர்கள் மற்றும் வெள்ளை மேலாதிக்கம் கொண்டவர்கள் போன்றோரை தீவிரமாக எதிர்க்கும் மிகத் தீவிரமான இடதுசாரி அமைப்புகளை குறிக்கும் ஒரு தலைமை இயக்கமாகும்.