TNPSC Thervupettagam

ஆன்லைன் உத்தரவாத கண்காணிப்பு அமைப்பு (OAMS)

October 13 , 2018 2107 days 592 0
  • பாராளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் விஜய் கோயல் சமீபத்தில் ஆன்லைன் உத்தரவாத கண்காணிப்பு அமைப்பை (Online Assurances Monitoring System-OAMS) தொடங்கி வைத்தார்.
  • இது மத்திய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டது.
  • பாராளுமன்ற விவகாரங்களின் உத்தரவாதங்களில் வெளிப்படைத்தன்மையை உருவாக்குவதே இதன் குறிக்கோளாகும்.
  • இந்த அமைப்பானது நாடாளுமன்ற அவையில் வழங்கப்பட்ட உத்தரவாதம் தொடர்பான தகவல்களை காகிதமற்ற முறையில் உருவாக்கி டிஜிட்டல் வடிவத்தில் கிடைக்கச் செய்கிறது.
  • இதன் வழியாக, பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சகமானது இந்த மின் அலுவலகத்தின் ஊடாக சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு உத்தரவாதமளிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்