TNPSC Thervupettagam

ஆன்லைன் பகுப்பாய்வுக் கருவி

June 5 , 2018 2239 days 605 0
  • மத்திய உள்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் 2010-ஆம் ஆண்டின் வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் {Foreign Contribution (Regulation) Act, 2010} கீழ் அனுமதிக்கப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்ட பல்வேறு அமைப்புகளால் பெறப்படும் வெளிநாட்டு நன்கொடைப் பங்களிப்புகளின் போக்கு மற்றும் பயன்பாட்டினைக் கண்காணிப்பதை வசதிப்படுத்த ஆன்லைன் பகுப்பாய்வுக் கருவியை தொடங்கி வைத்துள்ளார்.
  • இந்த இணையம் அடிப்படையிலான கருவியானது வெளிநாட்டு நிதிகளின் மூல ஆதாரத்தையும், இந்தியாவில் அவற்றின் உண்மையான பயன்பாட்டையும் தீவிரமாக விசாரித்து ஆராய அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முடிவெடுப்பாளர்களுக்கு உதவும்.
  • இந்தக் கருவியானது வெளிநாட்டு நிதியினைப் பெறும் அமைப்புகளின் 2010 ஆம் ஆண்டின் வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தினுடனான இணக்கம் தொடர்பாக ஆதார அடிப்படையிலான (evidence-based) தரவுகளின் வழிநடத்துதலோடு (evidence-based) கூடிய முடிவுகளை எடுக்க அதிகாரிகளுக்குத் திறனை வழங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்