ஆப்பிரிக்கப் பென்குயின்களை அழிவிலிருந்து காப்பாற்றச் செய்யும் ஒரு முயற்சியில், தென்னாப்பிரிக்க நாட்டின் அரசானது, ஆறு முக்கிய இனப்பெருக்கத் தளங்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை நிறுவியுள்ளது.
இனப்பெருக்கப் பகுதிகளைச் சுற்றியுள்ள வணிக ரீதியான மீன் பிடித்தலுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 10 ஆண்டு காலத் தடை விதித்துள்ளது.
ஆப்பிரிக்கப் பென்குயின்கள் ஆனது பேரரசப் பெங்குயின்களை விட மிகச் சிறியவை என்பதோடு மேலும் இவை தென்னாப்பிரிக்காவில் மட்டுமே மிகப் பிரத்தியேகமாகக் காணப் படுகின்றன.
தற்போதைய சரிவு விகிதத்தில், மிகவும் தனித்துவமான இந்தப் பறவைகள் 2035 ஆம் ஆண்டிற்குள் அதன் இயற்கை வாழிடங்களில் அழிந்து விடக் கூடும்.