TNPSC Thervupettagam

ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட செயற்கை மீன் இறைச்சி

February 5 , 2024 165 days 359 0
  • மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI) ஆனது, ஆய்வகத்தில் மீன் இறைச்சியை வளர்த்து பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்துவதற்கான கூட்டு ஆராய்ச்சி ஒப்பந்தத்தினை மேற்கொண்டுள்ளது.
  • இது ஆய்வகத்தில் வளர்க்கப்படுகின்ற - அல்லது உருவாக்கப்பட்ட / பண்படுத்தப்பட்ட இறைச்சியின் ஒரு வகை மட்டுமே ஆகும்.
  • கடல் சூழலில் வளராத கடல் சார் உணவு ஆனது, இறைச்சிகளுக்காக ஆய்வகத்தில் உருவாக்கப்படும் மற்ற இனங்கள் போலவே ‘வளர்க்கப்படுகின்றன’.
  • இதனால் ஒரு விலங்கினை வளர்த்து அதனை இறைச்சிக்காகக் கொல்ல வேண்டிய அவசியமற்றுப் போகிறது.
  • ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட செயற்கை மீன் இறைச்சியானது, மீன்களிலிருந்து குறிப்பிட்ட உயிரணுக்களைப் பிரித்தெடுத்து விலங்குகளின் உடற்கூறுகள் இல்லாத ஓர் ஊடகத்தைப் பயன்படுத்தி அவற்றை ஆய்வகக் கட்டமைப்பில் வளர்ப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.
  • முழு தயாரிப்பு ஆனது 'உண்மையான' மீன் இறைச்சியின் சுவை, உருவமைப்பு மற்றும் ஊட்டச்சத்து பண்புகளைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • டச்சு நாட்டின் மருந்தியல் நிபுணர் மார்க் போஸ்ட் 2013 ஆம் ஆண்டில் வளர்ப்பு (செயற்கை) இறைச்சிக்கான கருத்தாக்கத்தை முதன்முதலில் முன்வைத்தார்.
  • 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், அமெரிக்க வேளாண்மைத் துறையானது அந்த நாட்டில் வளர்ப்பு (செயற்கை) கோழி இறைச்சியின் விற்பனைக்கு அனுமதி வழங்கச் செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்