ஜப்பான் அரசானது மணிப்பூர் மருத்துவரான தங்ஜம் தபாலி சிங்குக்கு ‘ஆர்டர் ஆஃப் ரைசிங் சன்’ எனும் விருதை வழங்கியுள்ளது.
இந்தியாவில் ஜப்பானைப் பற்றி நன்கு புரிந்து கொள்ளவும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை ஆழப்படுத்தவும் உதவிய அவருக்கு இது வழங்கப் பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போரின் போது போரிடப்பட்ட இம்பால் போரின் 70வது ஆண்டு நிறைவு விழாவை சிங் ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த விருதை ஜப்பானியப் பேரரசர் மீஜி 1875 ஆம் ஆண்டில் ஏற்படுத்தினார்.
இது சர்வதேச உறவுகளில் சாதனைகள், ஜப்பானியக் கலாச்சாரத்தை மேம்படுத்துதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நலன் புரிதல் அல்லது தமது துறைகளில் சாதனைகள் புரிந்தவர் ஆகியோருக்கு வழங்கப் படுகிறது.