ஜப்பான் நாடானது இங்கிலாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுடன் இணைந்து, தனது அடுத்த தலைமுறை தொழில்நுட்பம் சார்ந்த போர் விமானத்தினை உருவாக்கச் செய்கிறது.
இந்தப் புதிய ஜெட் விமானமானது, பிரிட்டனின் டைபூன் ரக போர் விமானங்கள் மற்றும் ஜப்பானின் F-2 ரக விமானங்களுக்கான ஒரு மாற்றாகக் கருதப்படுகிறது.
இந்த மூன்று நாடுகளும் அமெரிக்காவின் ஐந்தாம் தலைமுறைத் தொழில்நுட்பம் சார்ந்த F-35 ரேடாருக்குப் புலப்படாத வகையிலான போர் விமானங்கள் திட்டத்தின் ஒரு பங்குதாரர் ஆகும்.
இதற்கிடையில், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளும் ஆறாம் தலைமுறை தொழில் நுட்பம் சார்ந்த விமானங்களை வாங்க முயல்வதாகக் கருதப் படுகிறது.
சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் தற்போது பெய்ஜிங்கின் J-20 மற்றும் J-31 ஜெட் விமானங்கள் மற்றும் மாஸ்கோவின் Su-57 போன்ற ஐந்தாம் தலைமுறை தொழில் நுட்பம் சார்ந்த போர் விமானங்களை இயக்கி வருகின்றன.