இரண்டாம் உலகப் போரின் போது குறிமுறை நீக்க வல்லுநராக இருந்த ஆலன் தூரிங் என்பவரின் உருவத்தை பிரிட்டனின் புதிய 50 பவுண்ட் பணத்தில் பொறிப்பதற்காக இங்கிலாந்து வங்கியினால் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பழமையான பிரிட்டீஷ் சட்டத்தின் கீழ் அவருடைய ஓரினச் சேர்க்கைக் குற்றத்திற்காக அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டு அதன் மூலம் ஏற்பட்ட அவருடைய துயரமான இறப்பிற்குப் பின்பு பத்தாண்டுகள் கழித்து இந்த முக்கியமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டில் இவர் இறந்த பின்பு இரண்டாம் எலிசபெத் அரசியிடமிருந்து கருணை மன்னிப்பினைப் பெற்றார்.
இவருடைய தூரிங் இயந்திரங்கள் ஜெர்மனின் நாஜிப் படைகளின் மீது அழுத்தம் செலுத்துவதற்கு நேச நாடுகளுக்கு உதவியது.
அறிவியல் துறையில் இவருடைய தலைசிறந்தப் பங்களிப்புகளுக்காக கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் தந்தை என்று இவர் அறியப்படுகின்றார்.