TNPSC Thervupettagam

ஆலிவ் ரிட்லி ஆமைகளின் குஞ்சு பொரிப்பிற்கான தளங்கள்

March 17 , 2024 124 days 310 0
  • தமிழ்நாடு வனத்துறையானது ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகளுக்காக ‘பருவநிலை நெகிழ் திறன் கொண்ட’ குஞ்சு பொரிப்புத் தளங்களை அமைத்துள்ளது.
  • சென்னை மற்றும் நாகப்பட்டினத்தில் தலா இரண்டு, விழுப்புரம், கடலூர், நாகப் பட்டினம், திருநெல்வேலி, இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகியவற்றில் தலா ஒன்று என 10 குஞ்சு பொரிப்புத் தளங்கள் நிறுவப்பட்டுள்ளன.
  • ஆமைக் குஞ்சுப் பொரிப்பு இடங்களில் நிலவும் அதிக வெப்பநிலையானது, பெண் ஆமைக் குஞ்சுகளை அதிக விகிதத்தில் உற்பத்தி செய்யவும், குளிர்ச்சியான வெப்ப நிலை ஆண் ஆமைக் குஞ்சுகளை அதிக விகிதத்தில் உற்பத்தி செய்ய வழிவகுக்கும் என்று அறியப்படுகிறது.
  • கடல் ஆமைகள் 30°C வெப்பநிலை என்ற அளவு வெப்பநிலையுடன் வெப்பநிலை சார்ந்த பாலின நிர்ணயத்தைக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்