TNPSC Thervupettagam

ஆளில்லா வான்வழி விமானங்களின் பொதுச் சோதனை மையம்

August 19 , 2023 336 days 204 0
  • பாதுகாப்புச் சோதனை உள்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் இந்தியாவின் முதல் ஆளில்லா வான்வழி வாகன அமைப்புகளின் (ட்ரோன்) பொதுச் சோதனை மையமானது  தமிழ்நாட்டில் நிறுவப்பட உள்ளது.
  • இந்த மையமானது ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வல்லம் வடகலில் உள்ள சிப்காட் தொழில்துறைப் பூங்காவில் நிறுவப்பட உள்ளது.
  • இது தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகத்தினால் (TIDCO) நிறுவப்படும்.
  • TIDCO என்பது தமிழ்நாடு பாதுகாப்புத் தொழில்துறை வழித்தடத்தை (TNDIC) செயல் படுத்துவதற்கான தலைமை நிறுவனம் ஆகும்.
  • விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைகளில் இந்திய அரசு தன்னிறைவு அடைவதில் தமிழக மாநில அரசு குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்க இந்தச் சோதனை மையம் உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்