TNPSC Thervupettagam

ஆளில்லா விமானக் காவல் பிரிவு

July 3 , 2023 384 days 287 0
  • இந்தியாவின் முதல் ‘ஆளில்லா விமானக் காவல் பிரிவு’ சென்னையில் தொடங்கப் பட்டது.
  • அடையாறு பெசன்ட் அவென்யூவில் புதிதாக உருவாக்கப்பட்ட சிறப்பு ட்ரோன் காவல் பிரிவைக் காவல்துறை இயக்குநர் (டிஜிபி) மற்றும் காவல்துறைத் தலைவர் சி. சைலேந்திர பாபு திறந்து வைத்தார்.
  • இந்தப் பிரிவு இரண்டு மாடி கட்டிடத்தில் நிறுவப்பட்டதுடன்  20க்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற காவலர்களுடன் செயல்படுகிறது.
  • தற்போது மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரைகளைச் சுற்றி ஆளில்லா விமானங்கள் இயக்கப் படுகின்றன.
  • இந்த ட்ரோன் காவல் பிரிவில், மூன்று பிரிவுகளின் கீழ் மொத்தம் ஒன்பது ட்ரோன்கள்  விரைவுப் பதில் கண்காணிப்பு ட்ரோன்கள்; கன தூக்கு மல்டிரோட்டர் ட்ரோன் மற்றும் நீண்ட வரிசை ஆய்வு விங் விமானம் ஆகியவை கிடைப்பதோடு அது உள்ளமைக்கப் பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) திறன்களையும் கொண்டுள்ளது.
  • இந்த ட்ரோன்களை, 5 கி.மீ., தொலைவு வரை கட்டுப்பாட்டு அறையிலிருந்து இயக்க முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்